ஈ.வே.ரா சிலை கடவுள் மறுப்பு வாசகம்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள ஈ.வே. ராமசாமியின் சிலைக்கு கீழ் இருக்கும் கடவுள் மறுப்பு வாசகங்கள் பெரும்பாலான மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. ஒரு மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்பதால் அதனை நீக்க வேண்டும். குறிப்பாக கோயில்களில் முன் இருப்பதையாவது உடனடியாக நீக்க வேண்டும். மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என தெய்வநாயகம் என்பவரின் சார்பில் அவரது வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, கோரிக்கையை ஏற்பதாகவும் மனு விரைந்து பட்டியலிட்டு விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.