கோயில் சிலை சேதம்

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தின் திடாவி கிராமத்தில் ஒரு சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வைக்கப்பட்டிருந்த கடவுள் சிலையை சேதப்படுத்திய ஒரு இளைஞரை உள்ளூர் மக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் யாகூப் என்ற ஒரு முஸ்லிம் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். திடாவி காவல் நிலைய ஆய்வாளர் முகேஷ் சோலங்கி, ‘ ​​குற்றம் சாட்டப்பட்ட யாகூப் தான் கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிலையை சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்டார். சிலையைத் தவிர வேறு எந்தப் பகுதிக்கும் சேதம் ஏற்படவில்லை. அந்த நபரை கைது செய்துள்ளோம். அவரிடம் விசாரணை மேற்கொண்டு நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.