ஹிந்துக்களின் சகோதரத்துவம்

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் தல்வானா கிராமத்தில் உள்ள 1,200 வருட பழமையான வரந்தா வீர் மகாராஜ் கோயில் உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிந்துக் கோயிலின் தலைமை பூஜாரி மத நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பரப்பும் விதமாக, இப்தார் விருந்து ஏற்பாடு செய்து முஸ்லிம்களின் ரம்ஜான் நோன்பை முடித்து கோயில் வளாகத்தில் மக்ரிப் தொழுகை நடத்த முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தார். சுமார் 100 முஸ்லிம்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.