ம.பி’யில் மற்றொரு லவ் ஜிஹாத்

மத்தியப் பிரதேசத்தில் தொடர்ந்து பல லவ் ஜிஹாத் வழக்குகள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டுள்ளன. அந்த வரிசையில், கந்த்வா மாவட்டத்தின் கோகுல்காவ் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து காமினி என்ற 20 வயது ஹிந்து பட்டியல் சமூக பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த காவல் துறையினர் முதலில் இது ஒரு தற்கொலை என முடிவு செய்து வழக்கை முடித்து விட்டனர். ஆனால், அந்த பெண்ணின் பெற்றோர் அவரின் அலைபேசியை ஆராய்ந்தபோது அதில் அர்மான் என்ற முஸ்லிம் இளைஞன் அந்த பெண்ணுடன் நெருக்கமாகப் பழகியதும், வீட்டைவிட்டு வெளியேறி தன்னை திருமணம் செய்ய மிரட்டியதும் தெரிய வந்தது. மேலும், அவன் அவர்கள் ஒன்றாக இருந்த புகைப்படங்களை வெளியிடுவதாகவும் மிரட்டியுள்ளான். இதையடுத்து அந்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரிய வந்தது. இது குறித்து காவல் துறைக்கு தெரியப்படுத்தியதும், வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது. அர்மான் கைது செய்யப்பட்டுள்ளார்.