தி.மு.கவினரின் அக்கப்போர்

சேலம் மாவட்டம் தலைவாசல் சுங்கச்சாவடியில், கட்டணம் செலுத்தக்கூறிய பெண் ஊழியரை தி.மு.க ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நிவாஸ் தாக்கி மானபங்கம் செய்துள்ளார். சென்னையில் உள்ள தி.மு.க கவுன்சிலர் ஒருவர், புதுவீட்டு கட்டும் வீட்டு உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டும் வீடியோ ஒன்றை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது. திருநீர்மலையில் மாதம் பத்தாயிரம் ரூபாய் மாமுல் கேட்டு, அதை தர மறுத்த அனீஷ் என்ற பிரியாணி கடை உரிமையாளரை, தாம்பரம் தி.மு.க பெண் கவுன்சிலர் சித்ரா முரளிதரனின் மைத்துனர் தினேஷ் அவரது கூட்டாளி சுகுமாருடன் சேர்ந்து தாக்கி கடையை உடைத்துள்ளார். தி.மு.க பதவியேற்றதில் இருந்து இப்படி தமிழகம் முழுவதும் இவர்கள் நடத்தும் அராஜகங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனை தி.மு.க தலைமை தடுக்கவும் தட்டிக்கேட்கவும் முயற்சிப்பதாகத் தெரியவில்லை. இது எங்கே போய் முடியுமோ என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.