கிறிஸ்தவ பாகுபாடுகள்

அகால சம்பவத்தில் பள்ளி மாணவனான 7 வயது மகனை இழந்த ஒரு கிறிஸ்தவ தாய், தன் வீட்டில் சடலமாக கிடைக்கும் மகனை புதைக்க கல்லறையில் இடம் தர கோரியபோது, அதற்கு ஆயிரம் சாக்குகள் விதிமுறைகளை காரணமாகக் காட்டி இடம் தர மறுத்துள்ளது கிறிஸ்தவ நிர்வாகம். பாதிக்கப்பட்ட அந்த தாய், சிறிதுகூட மனசாட்சியே இல்லாமல் காரனம் கூறும் நீங்கள் எல்லாம் ஒரிஜினல் கிறிஸ்தவர்கள்தானா? இப்படி பிரித்து பிரித்துக்கொண்டே போய் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டுள்ளார் அந்த தாய். மேலும், ஏசுவின் படங்களை வீட்டில் இருந்து தூக்கி எறியப் போகிறேன்” என்றும் கூறியுள்ளார். முன்னதாக, அவரது தாய் இறந்தபோது ஜெபிக்க அழைத்தபோதும் இதேபோல அவர்கள் நடந்ததையும் சொல்லி கிறிஸ்தவத்தில் உள்ள பிரிவினைகளையும் பாகுபாடுகளையும் கோடிட்டுக்காட்டியுள்ளார்.