தமிழகத்தில் லவ் ஜிஹாத்

தேனி மாவட்டம் கம்பம் அருகே கம்பம்மெட்டு காலனியைச் சேர்ந்தவர் ஷாஜகான் என்ற முஸ்லிம் நபர் கூலித்தொழிலாளியாக பணியார்றுகிறார். இவருக்கும், நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான என்ஜினீயரிங் மாணவிக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஷாஜகான் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, மாணவியை தேனிக்கு கடத்தி சென்றுள்ளார். மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து முக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இவ்வழக்கை விசாரித்த காவல்துறையினர், தேனியில் இருந்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, ஷாஜகானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.