மாற்றத்தை ஏற்படுத்தும் மகளிர் விருதுகள்

பாரதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் மகளிருக்கான விருதுகளின் 5வது நிகழ்வை நிதி ஆயோகின் பெண் தொழில்முனைவோர் அமைப்பு 2ஏற்பாடு செய்திருந்தது. சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழாவின் பகுதியாக இந்த ஆண்டு ‘வலிமையும் திறமையும் கொண்ட பாரதத்திற்கு பங்களிப்பு செய்ததைக் கொண்டாடுவதற்காக சாதனைப் பெண்கள் 75 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, ஐ.நா முன்னாள் உதவி தலைமைச் செயலாளர் லட்சுமி பூரி, ஏரோநாட்டிக்கல் அமைப்பின் தலைமை இயக்குனர் டாக்டர் டெஸ்ஸி தாமஸ், தூர்தர்ஷனின் முன்னாள் செய்தி ஒருங்கிணைப்பாளர் சல்மா சுல்தான் உள்ளிட்டோர் விருது பெற்றவர்களில் சிலர். விளையாட்டுத்துறையை சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி, லாவ்லினா போர்கோஹைன் போன்றோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.