கணக்கில் வராத கோயில் நகைகள்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு கடந்த மார்ச் 1ல், புதுச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் ரூ. 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்கமணிகள் பதித்த பெரிய ருத்ராட்ச மாலையும் அம்மனுக்கு வைர கற்கள் பதிக்கப்பட்ட நெக்லஸும் நன்கொடையாக வழங்கப்பட்டன. ஆனால், கோயில் நிர்வாகம் இந்த நகைகள் குறித்து முறையான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. நகைகளை பதிவு செய்து மதிப்பீடு செய்து கனக்கில் வைக்காமல் பணியாளர்களே வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. கோயிலுக்கு வழங்கப்பட்ட நகையை மறைக்கும் முயற்சியா இது என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து, பா.ஜ.க வழக்கறிஞர் கணேஷ், ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். நகை விவகாரத்தில் முறைகேடு நடைபெறவில்லை. நகைகள் 36 லட்சம் ரூபாய் என நன்கொடையாளர்கள் ரசீது தந்துள்ளனர். விடுமுறைகளால் கணக்கில் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. வைர நெக்லஸுக்கு உரிய பில் இல்லாததால் அதை கேட்டுள்ளோம் என கோயில் மேலாளர் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.