கள்ள ஓட்டு கௌன்சிலர்

திருச்சி மாநகராட்சி 56வது வார்டில், தி.மு.க., சார்பில் மஞ்சுளாதேவி போட்டியிட்டார். வாக்குப்பதிவு தினத்தன்று, கருமண்டபம் மாநகராட்சி துவக்கப் பள்ளியில் உள்ள 647ம் எண் வாக்குச் சாவடிக்கு சென்ற மஞ்சுளாதேவி, வரிசை எண் 673ல் உள்ள முத்துலெட்சுமி என்பவரது வாக்கை பதிவு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து 646ம் எண் வாக்குச் சாவடிக்கு சென்று தனது வாக்கையும் பதிவு செய்து உள்ளார்.இதனால், அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க., உள்ளிட்ட பல கட்சிகளின் வேட்பாளர்கள், தேர்தல் அலுவலரிடம் புகார் செய்தனர். கள்ள ஓட்டு போட்ட தி.மு.க வேட்பாளர் மஞ்சுளாதேவி வெற்றி பெற்று கௌன்சிலராக பதவியும் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், அதே வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட கவிதா என்பவர் மஞ்சுளாவை தகுதி நீக்கம் செய்யக் கோரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.