பாதுகாப்பு அமைச்சக பட்ஜெட் குழு

பாரதத்தின் பாதுகாப்பு அமைச்சகம் முப்படைகளுக்கான பட்ஜெட் செலவு செய்யப்படும் போக்கை கண்காணிக்க பிரத்யேக குழு ஒன்றை அமைக்க உள்ளது. இந்த குழுவானது முப்படைகளும் தங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை எப்படி செலவு செய்கின்றன, சரியாக செலவு செய்கின்றனவா, ஒதுக்கப்படும் நிதி அனைத்தும் செலவு செய்யப்படுகிறதா என கண்காணிக்கும். இந்த கண்காணிப்பு குழுவில் முப்படைகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள் என பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.