வழக்கறிஞர்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் மேலூர்  பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு  அச்சிறுமியின் சடலத்தை அவளது வீட்டு வாசலில் வீசி சென்ற லவ் ஜிஹாதிகளின் கொடூரச் செயலை கண்டித்தும், இறந்த மாணவிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டியும் காவல்துறையின் மெத்தன போக்கை கண்டித்தும் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வாயில் முன்பு  வழக்கறிஞர்கள் சார்பாக நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாணவியின் மரணத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தப்பட்டதுடன் வழக்கை சி.பி.ஐ விசாரணை செய்ய வேண்டும், குற்றவாளிகளுக்கு மரண தன்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.