அறநிலைத்துறை அட்டூழியம்

தஞ்சை பெரிய கோயிலுக்குள், கனரக வாகனம் ஒன்று உலா வரும் காணொளி ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது ஹிந்து பக்தர்களின் மனத்தில் கடும் வேதனையை எழுப்பியது. தொன்மையான ஒரு கோயிலை ஹிந்து சமய அறநிலையத்துறை பாதுகாக்கும் லட்சணம் இதுதானா? என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில்,தற்போது தஞ்சையிலுள்ள தொன்மையான அழகிய பெரிய ராமர் கோயிலை ஹிந்து சமய அறநிலையத்துறை தனது ‘கமிஷனர் அலுவலகமாக’ பயன்படுத்தி வருகிறது. சட்டத்திற்கு முற்றிலும் புறம்பான ஹிந்து சமய அறநிலையத்துறையின் இந்த செயலை பல புகைப்பட ஆதரங்களுடன்ம் வெளியிட்டுள்ளார் டி ஆர் ரமேஷ்.