தமிழகத்தில் லவ் ஜிஹாத்

தமிழகத்தில் கட்டாய மதமாற்றம், லவ் ஜிஹாத் போன்றவை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டம் தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகளான 17 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த நாகூர் ஹனிபா என்பவர் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். இதற்கு, சிறுமியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 14 அன்று வெளியில் சென்ற சிறுமி காணாமல் போனார். நாகூர் ஹனிபா அவளை கடத்திச் சென்றதாக சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 1ம் தேதி நள்ளிரவு சிறுமியின் வீட்டுக்கு வந்த நாகூர் ஹனிபாவின் தாய் மதீனா, சிறுமி சீரியஸாக இருப்பதாக கூறியுள்ளார். ஆட்டோவில் குற்றுயிரும் குலையுயிருமாக அந்த சிறுமியை வீட்டு வாசலில் போட்டு சென்றுவிட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், காவல்துறையினர் நாகூர் ஹனிபா, ராஜா முகமது, சாகுல் ஹமீது, மதினா பேகம், ரம்ஜான் பேகம், ராஜா முகமது பிரகாஷ், பெருமாள் ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இவர்கள் அந்த சிறுமிக்கு போதை ஊசி செலுத்தி, தொடர்ந்து  கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதனால்தான் அந்த சிறுமி உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு வி.ஹெச்.பி., ஹிந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் பல ஹிந்து அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன. மக்களும் சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். வழக்கம்போல தி.மு.க, அதன் கூட்டணிக் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், இடதுசாரிகள், பெண்ணிய இயக்கங்கள் என அனைத்தும் கண்ணை மூடிக்கொண்டுள்ளன.