பேரூராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.க

கன்யாகுமரியில் உள்ள தென்தாமரைகுளம் பேரூராட்சி தேர்தலில் 4 வார்டுகளில் பா.ஜ.கவும், 3 வார்டுகளில் அ.தி.மு.கவும், 3 வார்டுகளில் தி.மு.கவும், 1 வார்டில் காங்கிரசும், 4 வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். இதனையடுத்து பேரூராட்சியை கைப்பற்ற பா.ஜ.க, தி.மு.க இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், கங்கிரசிஸ் சார்பில் வென்ற மல்லிகா முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்துள்ளார். இதனால், பா.ஜ.க தென்தாமரைகுளம் பேரூராட்சியில் பா.ஜ.க வெல்வது உறுதியாகியுள்ளது. முன்னதாக, அவர் பா.ஜ.கவில் இணைந்ததையடுத்து தி.மு.கவினர் பா.ஜ.கவினரிடையே மோதல் ஏற்பட்டது.