பயங்கரவாதி கைது

தமிழகத்தின் தஞ்சாவூர், மதுரை, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களுக்கும், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திற்கும் ஹிஸ்ப் உத் தஹ்ரிர் என்ற பயங்கரவாதக் குழுவின் தலைவராக செயல்பட்டவர் (நகிப்) பாகவி. இவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எசின் ஒரு கிளைதான் இந்த அமைப்பு. இஸ்லாமிய அரசு அல்லது கலிபாவை நிறுவுவதற்கும், தீவிர இஸ்லாமிய போதகர் டாக்கி அல் தின் எழுதிய அரசியலமைப்பை அமல்படுத்துவதற்கும் அப்பாவி இளைஞர்களை மூளை சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றி வந்துள்ளது இந்த அமைப்பு. முன்னதாக, இந்த வழக்கில் இரண்டு குற்றவாளிகள் ஏற்கனவே என்.ஐ.ஏ’வால் கைது செய்யப்பட்டுள்ளனர்.