சட்டவிரோத ஏசு சிலை அகற்றம்

கர்நாடகாவின் கோலார் மாவட்டம் உள்ள கோகுண்டே கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்ரமித்து அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த ஏசுவின் சிலையை உள்ளூர் நிர்வாகம் இடித்து தள்ளியது. முல்பாகல் நகர் தாசில்தார் ஷோபிதா உத்தரவின் பேரில், 20 அடி சட்டவிரோத ஏசு சிலையை அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். கலவரம் ஏற்படாமல் தடுக்க அதிகாலை 3 மணியளவில் காவலர்கள் பாதுகாப்புடன் சிலை அகற்றப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிலை அகற்றப்பட்டது. சிலை அகற்றப்பட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என் தாசில்தார் தெரிவித்தார்.