ஹனுமான் கோயில் சேதம்

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் கோவிலில் உள்ள ஹனுமான் கோயிலும் ஹனுமன் சிலையும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலை 2, ஜி.டி சாலைகளில் பக்தர்களும் ஹிந்து அமைப்புகளும் போராட்டம் நடத்தினர். இது சம்பந்தமாக ஷாபி அகமது என்ற முஸ்லிம் நபரை ஜார்க்கண்ட் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹசாரிபாக் ஏற்கனவே பதற்றம் நிறைந்த பகுதி என்பதால், இச்சம்பவத்தையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஷாபி அகமது, தான் குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.