நீட் அனிதா அண்ணன் கைது

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனிதா. இவர் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிது. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூர் பெரியார் என்ற நகரில் செந்தில், வசந்தி என்ற தம்பதிகள் வசித்து வருகின்றது. அங்குதான் அனிதாவின் குடும்பத்தாரும் வசித்து வருகின்றனர். வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்த வசந்தியை அனிதாவின் அண்ணன் அருண்குமார், இருசக்கர வாகனத்தை மிக வேகமாக ஓட்டி அச்சுறுத்தியுள்ளார். இது குறித்து வசந்தியின் கணவர் அருண்குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது வசந்தி செந்தில் தம்பதியை அருண்குமார் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வசந்தி காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் பெண் வன்கொடுமை சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.