ஷாஹீன்பாக் கட்டாய மதமாற்றம்

டெல்லி ஷாஹீன்பாக்கில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ஒரு பெண் மருத்துவர்.  அவர் டெல்லி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அவர் வசிக்கும் வீட்டின் நில உரிமையாளர் ஷாபு குரேஷி, தன்னை முஸ்லிமாக மதம் மாறும்படியும், தனது நிறுவனத்தில் உள்ள அனைத்து ஹிந்து ஊழியர்களையும் நீக்கிவிட்டு முஸ்லிம்களை மட்டும் பணியமர்த்தவும் மிரட்டினார். இங்கு சிலை வழிபாடு கூடாது, மீறினால் தனக்குள்ள காஷ்மீர் பயங்கரவாதத் தொடர்புகளைப் பயன்படுத்தி டெல்லியின் படேல் நகரில் வசிக்கும் அவரது குடும்பத்தை கொன்று விடுவதாகவும் மிரட்டினார். தனது 18 மாத மகனை மதம் மாற்ற ஒரு மவுல்வியை அழைத்து வந்தார். ஷாபு குரேஷியின் நண்பர்களான  இக்லாக், அஸ்லாம், இக்பால் உள்ளிட்ட சிலர்  வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து மிரட்டுகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார். அவரின் இந்த புகாரின் அடிப்படையில் டெல்லி கவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.