பிரதமரை பாராட்டிய சீக்கியர்கள்

சீக்கிய குரு கோவிந்த் சிங்கின் மகன்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 26ம் தேதியை ‘வீர் பால் திவஸ்’ என்று மத்திய அரசு கொண்டாடும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். மத்திய அரசின் இந்த முடிவைப் பாராட்டி உலகெங்கிலும் உள்ள பல்வேறு சீக்கிய அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட பலரிடம் இருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள் வந்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.