வீரர்களுக்கு அஞ்சலி

காஷ்மீரின் புலவமா மாவட்டத்தில் கடந்த 2019, பிப்ரவரி 14ம் தேதியன்று சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனம் மீது ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இறந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தி செய்தி வெளியிட்டார்.