சேவாபாரதி பயிற்சி மையம்

சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் நடைபெற்று வரும் சரயு கணினி பயிற்சி மையம் மற்றும் சகோதரி நிவேதிதா தையல் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி 13.2.2022 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் எம்.என் காயத்ரி அறக்கட்டளை நிறுவனர் பாலகிருஷ்ணன் கலந்துக் கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். கல்வி தான மையங்கள் நடைபெறும் விதம் குறித்து ஆசிரியைகளுடன் கலந்துரையாடினார். இந்த பயிற்சி மையங்கள் 2005ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.