கோயில் கூரைக்கு தீ வைப்பு

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் லட்சுமியாபுரத்தை சேர்ந்த கணேசன் என்பவர், அப்பகுதியில் பழனி பாதயாத்திரை குழுவை நடத்தி வருகிறார். முருகன் கோயில் ஒன்றையும் கட்டியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் அங்கு சென்ற சில போதை ஆசாமிகள் அங்கு மது அருந்தியுள்ளனர். அதனை தட்டிக்கேட்ட கணேசனை, அவர்கள் தாக்கியதுடன் அக்கோயிலுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த கூரைக்கும் தீ வைத்தனர். இதனால் கோயிலில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது. இது குறித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.