பாதுகாப்புத் துறையில் மேக் இன் இந்தியா

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பட், ‘155 மி.மீ பீரங்கித் துப்பாக்கி அமைப்பு ‘தனுஷ்’, லகுரக போர் விமானம் ‘தேஜாஸ்’, ‘ஆகாஷ்’ ஏவுகணை, ஐஎன்எஸ் கல்வாரி, ஐஎன்எஸ் கந்தேரி, ஐஎன்எஸ் சென்னை, நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல் உள்ளிட்ட பல்வேறு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு தளவாடங்கள் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ முன்முயற்சியின் கீழ் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளில் பல கொள்கை முன்முயற்சிகளை அரசு எடுத்துள்ளதோடு பாதுகாப்பு உபகரணங்களின் உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து இறக்குமதியைச் சார்ந்திருப்பது குறைக்கிறது. பாதுகாப்பு கொள்முதல் நடைமுறையில் உள்நாட்டில் பொருட்களை வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது’ என்றார்.