பத்திரிகை ஆசிரியர் கைது

காஷ்மீரை சேர்ந்த ‘தி காஷ்மீர் வாலா’ என்ற ஆன்லைன் செய்தி இதழின் ஆசிரியர் ஃபஹத் ஷா என்பவரை காஷ்மீர் காவல்துறை கைது செய்துள்ளது. இவர், தனது செய்தி இதழிலும், சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து பயங்கரவாத கருத்துகளை பரப்பியதுடன் போலி செய்திகளியும், தேசவிரோத கருத்துகளையும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம், மக்களிடம் அமைதியின்மையை ஏற்படுத்தி, அவர்களை போராடவும், பயங்கரவாதத்தில் ஈடுபடவும் முயற்ச்சித்துள்ளார் என கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தலைமறைவாகி புல்வாமா மாவட்டத்தில் பதுங்கி இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.