பிரதமருக்கு நன்றி

டெல்லியில் அமைந்துள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தராக தமிழகத்தை சேர்ந்த சாந்திஸ்ரீ பண்டிட்டை மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்காக அவர் பிரதமர் மோடி மற்றும் மத்திய கல்வி அமைச்சருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். தமிழரான தன்னை டெல்லி பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தராக நியமனம் செய்தது மிகப்பெரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாகவும் இது எனக்கு கிடைத்த கௌரவம் என குறிப்பிட்டுள்ளார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கத்தின் துணை வேந்தராக இருந்த ஜெகதீஷ்குமாரை சமீபத்தில் யு.ஜி.சி தலைவராக மத்திய அரசு நியமித்தது. இதனால் அவர் அப்பொறுப்பில் இருந்து விடுப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாவித்திரிபாய் பல்கலைகழகத்தில் பணியாற்றி வந்த சாந்திஸ்ரீ பண்டிட், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தனது எம்.பில்., முனைவர் பட்டத்தை பெற்றுள்ளார். தான் படித்த பல்கலைக் கழகத்திலேயே அவர் தற்போது துணைவேந்தராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.