பழங்குடியினரிடம் மதமாற்றம்

தமிழகத்தில் பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியின இனத்தவர்களை குறிவைத்து சட்டவிரோத மதமாற்ற கும்பலை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் மட்டும் வசிக்கும் வீரகம்பை பகுதிக்கு சென்ற கிறிஸ்தவ மதமாற்ற கும்பல், சட்டவிரோதமாக அவர்களை மதமாற்றம் செய்ய முயற்சித்தது. இதனை அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் அங்கு சென்று மதமாற்றம் செய்தவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இந்து முன்னணியின் உதவியால் மதமாற்றம் தடுக்கப்பட்டது. இதனையடுத்து அக்கிராமத்தை சேர்ந்த 20 குடும்பங்கள் இந்து முன்னணியில் இணைந்தனர்.