அரசர் கனவில் ராகுல்

மக்களவையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல், ‘பா.ஜ.க அரசு இரண்டு இந்தியாவை உருவாக்கி வருகிறது, ஒன்று பணக்காரர்களுக்கானது, மற்றொரு ஏழைகளுக்கானது’ என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘ராகுல் காந்தி, முன்பெல்லாம் இளவரசரைப் போல நடந்து கொள்வார். தற்போது அவர் தன்னை இந்த நாட்டின் அரசர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்’ என தெரிவித்துள்ளார். பா.ஜ.க துணைத் தலைவர் வைஜெயந்த் பாண்டா, ‘நகைச்சுவை மன்னர் படிப்படியாக உயர்ந்து தீமையின் இளவரசராக மாறிவிட்டார்’ என ராகுலை விமர்சித்துள்ளார்.