ஐ.சி.யூவில் காங்கிரஸ்

நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல், ‘பாரதம் என்பது கூட்டாட்சி. உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை பா.ஜ.க’வால் ஆள முடியாது’ என பேசினார். ராகுலின் பேச்சுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘வழக்கம் போல உங்ளின் பேச்சை கேட்டு சிரித்து மகிந்தோம் ராகுல் ஜி. தமிழகத்தை பா.ஜ.க ஆளவே முடியாது என் நீங்கள் கூறினீர்கள். இவ்விவகாரத்தில் நான் தமிழகத்தின் மைந்தன் என்ற வகையில் உங்களை வழிநடத்த விரும்புகிறேன். தமிழகத்தில் நீங்கள் தி.மு.க என்னும் ஆக்சிஜன் உதவியுடன் இருக்கிறீர்கள். புதுச்சேரியில் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். இது ஒரு மைல்கல். அதன் அடுத்த ஜங்ஷன் தமிழகம்தான். வரலாற்றை எப்போதும் மறக்காதீர்கள். அமேதியில் நடந்தது போன்றதொரு வரலாறு மீண்டும் நிகழ்த்தப்படும். அடுத்த நீங்கள் போலியாக ஒரு சர்ச்சையை உருவாக்கும் வரை விடைபெறுகிறேன்” என்று தனது பாணியில் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.