சி.பி.ஐ விசாரிக்கும் மதமாற்ற வழக்கு

தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலுாரை சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா, பள்ளி நிர்வாகத்தின் கிறிஸ்தவ மதமாற்ற அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை சி.பி சி.ஐ.டி விசாரிக்க உத்தரவிடக்கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த நீதிமன்ற உத்தரவை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பல்வேறு ஹிந்து அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.