தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு

அமேசான் இந்தியா நிறுவனம் ஆன்லைன் வாயிலாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அமேசானின் இணையதளத்தில் தேசிய மூவர்ண கொடி அச்சிட்டு விற்பனை செய்யப்பட்ட ஆயத்த ஆடைகள், விற்பனை செய்யப்பட்ட கீ செயின், சாக்லெட், கோப்பைகள், ஆடைகள் ஆகியவற்றின் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. தேசிய கொடி அவமதிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் அமேசானுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், ‘தேசியக் கொடிக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். தேசிய கொடியை பயன்படுத்துவது தொடர்பான விதிமுறைகள் உள்ளன. ஆனால் அமேசான் நிறுவனம் தேசியக் கொடி அச்சிடப்பட்ட காலணியை கூட விற்பனை செய்கிறது. எனவே தேசிய கொடியை அவமரியாதை செய்த அமேசான் நிறுவனம் மீது வழக்கு தொடுக்கும்படி டி.ஜி.பி’க்குஉத்தரவிட்டுள்ளேன்’ என மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார். அமேசானும் இவ்விவகாரம் குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது.