பா.ஜ.க போராட்டம்

மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் பள்ளி மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைத்திட வேண்டியும், சி.பி.ஐ விசாரணை கோரியும் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். நாற்காலிகள் போட காவல்துறை அனுமதிக்காத்தால் வந்திருந்தவர்கள் சாலையிலேயே அமர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்,