வெடிபொருட்கள் மீட்பு

மிசோரமில் லுங்கிலி பட்டாலியனின் துய்பாங் போஸ்டிலிருந்து அசாம் ரைபிள்ஸ் படை வீரர்கள் மற்றும் சைஹா மாவட்ட காவல்துறையினர் இணைந்து துய்பாங் சாங்லிங் சாலையில் மேற்கொண்ட ஒரு சாலை சோதனையில், அவ்வழியாக வந்த ஒரு மினி டிரக்கில் கடத்தி செல்லப்பட்ட 2,500 கிலோ வெடிபொருட்கள் மற்றும் 4,500 மீட்டர் டெட்டனேட்டர் கேபிள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் பயணம் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த அளவு வெடிபொருட்களை கொண்டு ஒரு போரே நடத்தலாம், பல்வேறு தேச விரோத செயல்களுக்கு கொண்டு செல்லப்பட்ட இவை மீட்கப்பட்டது மிகப்பெரிய விஷயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு, மணிப்பூரில் உள்ள மோரே நகரில் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை அசாம் ரைபிள்ஸ் படையினர் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.