கோயில் சொத்துகளை மீட்க உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தான் ஆகிய கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை உடனடியாக மீட்டு அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்தி சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், கோயிலின் சொத்துக்களை மறுஉத்தரவு வரும் வரை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது, சொத்துக்களை மீட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.