கருத்து தெரிவித்த எஸ்.ஐ. சஸ்பெண்ட்

பிரதமர் மோடி மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் அவருக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பிலும் ஆதரவுகள் பெருகி வருகிறது. அதேபோல, தி.மு.க பதவி ஏற்றவுடன் அவர்களது செயல்பாடுகளால் தினம் தினம் தி.மு.க’வினர் மீது மக்களின் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை காவல் உதவி ஆய்வாளர் சேகர் என்பவர் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். இந்த கருத்தை தாங்கிக்கொள்ள முடியாத தி.மு.க அரசு, உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ.கவினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.