கோயில் இடிப்பு தடுத்து நிறுத்தம்

திருப்பூர் மாவட்டம் செவந்தாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயிலை வருவாய்த் துறையினர் நேற்று இடிக்க முயன்றனர். இதனையறிந்த இந்து முன்னணி அமைப்பினர், மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கோயில் இடிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு  இந்து முன்னணி மற்றும் அருந்ததியர் விடுதலை முன்னணியினர் இணைந்து நில உரிமையை கேட்டு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.