பிரதமருக்கு நன்றி

பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் பாரதத்திலும் வெளிநாட்டிலும் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகள் உற்சாகமடைந்துள்ளனர். சில அரசியல் கட்சிகள் காலிஸ்தானி பிரிவினைவாதிகளை கவரும் வகையில் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. இந்நிலையில், பார்க் அவென்யூ, சவுதாலில் அமைந்துள்ள குருத்வாரா ஸ்ரீ குரு சிங் சபாவில் சீக்கிய சமூகத் தலைவர்கள் கூடி, சீக்கிய சமூகத்திற்காக பல்வேறு நன்மைகளை செய்ததற்காகவும், டிசம்பர் 26ம் தேதியை வீர் பால் திவஸ் என அறிவித்ததற்காகவும், தவறான புரிதல்களைப் போக்க உதவியதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரது அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். அப்போது பேசிய, சீக்கிய மதத் தலைவர்கள், குருத்வாரா கமிட்டி நிர்வாகிகள், பாரதம் மற்றும் அதன் தற்போதைய அரசாங்கம் பற்றி தவறான தகவல்களை முன்வைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.