சமுதாய நல்லிணக்க விழா

விஷ்வ ஹிந்து பரிஷத்  சார்பில் ஜனவரி 10 முதல் ஜனவரி 20 வரை சமுதாய நல்லிணக்க நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஜாதிகள் என்பது நமது சமூகத்திற்கு பலமே என்பதையும் ஹிந்து சமுதாயத்தில் தீண்டாமைக்கு இடமே இல்லை என்பது உணர்த்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் பெண்கள் பங்கேற்ற சமுதாய நல்லிணக்க பொங்கல் நிகழ்ச்சி, திருவிளக்கு பூஜை, புதுச்சேரியில் அனைத்து ஜாதியினர் பங்கேற்க சமுதாய நல்லிணக்க கூட்டம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. இதேபோல, பசு பாதுகாப்பு இயற்கை விவசாயம் ஆகியவற்றை காக்கும் வகையில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மாநில முழுவதும் ‘கோ பூஜை’ சிறப்பாக நடைபெற்றது. சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி என அனைத்து மாவட்டங்களிலும் கோ பூஜை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில் அகில பாரத இணைப் பொதுச்செயலாளர் கோ ஸ்தாணுமாலயன் பங்கேற்றார்.