ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை தாக்கியவர்கள் கைது

கம்பத்தில் சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் ரவிக்குமார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஹிந்து அமைப்புகள் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கம்பம் உமர் பாட்சா தெருவை சேர்ந்த அப்துல் வாசித், கம்பம் மெட்டு காலனியை சேர்ந்த சதாம் உசேன் ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். இருவரும் ரவிக்குமாரை தாக்கியதை ஒப்புக்கொண்டனர். இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.