கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவு

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரி பிராங்கோ முலக்கல் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் கன்னியாஸ்திரிக்கு கேரள திரைப்பட கலைஞர்கள் பார்வதி, ரீமா கல்லிங் ஆதரவு தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்த தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மா, கன்னியாஸ்திரிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும், கன்னியாஸ்திரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும், அவருக்கு தேசிய மகளிர் ஆணையம் துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விரைவில் பிராங்கோ முலக்கல் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.