பிந்து அம்மினி மீது தாக்குதல்

2018ல் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய முதல் பெண் பிந்து அம்மினி.  கேரளாவின் கோழிக்கோட்டில், அவர் தனது வழக்கறிஞர் ஒருவரை சந்திப்பதற்காக கடற்கரையில் இருந்தபோது, குடிபோதையில் இருந்த மீனவர் ஒருவர் அவரை சரமாரியாக தாகியுள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் தலையிட்டதால் அவர் தப்பி ஓடி விட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பிந்துவின் புகாரையடுத்து பேப்பூரைச் சேர்ந்த மோகன்தாஸ் என்ற அந்த மீனவர் கைது செய்யப்பட்டார். இது திட்டமிட்ட தாக்குதல்,  நான் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த மாதம் வேகமாக வந்த ஆட்டோரிக்ஷா என்மீது மோதியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என அவர் கூறினார். இவர் இதற்கு, சம்பந்தமே இல்லாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது பழி கூறியுள்ளார். அவர் மீது ஆட்டோ மோதியது தற்செயல் விபத்துதான். இது திட்டமிடப்பட்டது அல்ல. எந்த அமைப்பிற்கும் இதில் தொடர்பு இல்லை என அதனை விசாரித்த காவல்துறை ஏற்கனவே சொல்லிவிட்டது குறிப்பிடத்தக்கது.