ஆட்சியை கலைக்க கோரிக்கை

பஞ்சாப்  மாநிலத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாட்டை வேண்டுமென்றே ஏற்படுத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசை அகற்றிவிட்டு உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த அம்மாநில முன்னாள் முதல்வரும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சித் தலைவருமான அமரீந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். ‘மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை உறுதி செய்வதில் சன்னி அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டது. எங்கள் மாநிலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிக்கவும் வேண்டுமென்றால் உடனடியாக இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்’ என கூறினார்.