பயங்கரவாதிகள் கைது

கேரள பா.ஜ.க ஓ.பி.சி பிரிவு மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் கொலைத் தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் அதன் தாய் அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது. இவ்வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் நேரடி தொடர்பு கொண்டவர்கள் 8 பேர், உதவியவர்கள்6 பேர் என கேரல காவல்துறை தெரிவித்து உள்ளது. மேலும், கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த சஞ்சித் கொலை வழக்கில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் பயங்கரவாதி ஓட்டோமான் இன்ஷ் ஹக் என்பவன் கைது செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.