தி.மு.க ரௌடிகளின் அராஜகம்

சென்னை, தாம்பரம் அடுத்துள்ள மாடம்பாக்கம், அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சலீம் அவரது மனைவி நிஷா. இவர்கள் மாடம்பாக்கம் பகுதியில் சூப் கடை நடத்தி வருகின்றனர். தி.மு.கவை சேர்ந்த செல்வம், ராஜா இருவரும் தினமும் சூப் கடைக்கு சென்று ஓசியில் சிக்கன், சூப் சாப்பிட்டு வந்துள்ளனர். பின்னர் நிஷாவிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் எதுவும் தரமுடியாது என்று நிஷா கூறியதால் அவரது சூப் கடையை அடித்து நொறுக்கியுள்ளனர். இனிமேல் கடையை நடத்தமுடியாது எனக்கூறி நிஷாவிற்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனால் பயந்துபோன நிஷா தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். ஆபத்தான நிலையில் நிஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து தெரிவித்த நிஷா, ராஜா, செல்வம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுபோன்ற தி.மு.க ரௌடிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் ஸ்டாலின்?