கோயில்கள் இடிப்பை நிறுத்த வேண்டும்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சித்தம்பலத்தில் பேசிய காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி, ‘தமிழகத்தில் கோயில்கள் இடிக்கப்படுவதே நமது கஷ்டங்களுக்கு காரணம். கோயில்கள் பொழுதுபோக்கு தலங்களாக மாறி வருகின்றன. பெற்றோர் நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். மதுப்பழக்கம் மிக தவறானது. அரசே இதை ஊக்கப்படுத்துவது கவலை அளிக்கிறது. நல்ல சிந்தனைகளை ஏற்படுத்தி கொள்வதால் கடந்த ஜென்மத்தின் வினைகள் தீரும். முன்னோர்களை வழிபடுவதால் இறைவனின் அருள் கிட்டும்’ என கூறினார்.