கோயில் சிலை சேதம்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில், பழமையான துர்கையம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பூசாரி பூஜை முடிந்து கோயிலை பூட்டிச்சென்ற நிலையில், காலை மீண்டும் பூஜை செய்ய வந்தபோது, கோயிலில் இருந்த நவக்கிரக சிலைகள், சூலம் போன்றவை உடைத்து சேதப்படுத்தப்பட்டு இருந்தது கண்டு பூஜாரியும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, காவேரிப்பாக்கம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.