பாரதியர்களுக்கு கனடா விருது

கனடாவில் பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு ‘ஆர்டர் ஆப் கனடா’ என்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது பெறுவதற்க 135 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் பாரதத்தை சேர்ந்த மூவர் இடம் பெற்றுள்ளனர். பிரபல விஞ்ஞானி டாக்டர் வைகுண்டம் அய்யர் லட்சுமணன், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் நவ்ஜீத் சிங் தில்லான், குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் பிரதீப் மெர்ச்சன்ட் ஆகிய மூவரும் இந்த உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.