சிறுபான்மையினர் தேசிய ஆணையம்

சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட பின் டெல்லியில் இன்று நடைபெற்ற முழு ஆணையத்தின் கூட்டத்திற்கு, அதன் தலைவர் இக்பால் சிங் லால்புரா தலைமை தாங்கினார். சிறுபான்மையினர் நலன் மற்றும் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் தொடர்பான பல்வேறு முக்கிய விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. சிறுபான்மையினரின் கல்வி முறை, அனைத்து சமூகங்களின் சமயம் சார்ந்த நூல்கள் தயாரிப்பு, ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்த்து போன்ற விஷயங்களும் விவாதிக்கப்பட்டன.