காவல்துறையில் கருப்பு ஆடுகள்

கேளாவில் எல்லப்புள்ளியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த சஞ்சித் என்பவர் தன் மனைவியின் கண் எதிரில் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த மாதம், ஆலப்புழாவில் பா.ஜ.க மூத்த நிர்வாகி ரஞ்சித் ஸ்ரீனிவாசனை அவரது வீட்டில் வெட்டிக் கொன்றனர். இடுக்கி மாவட்டத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத செயல்கள் அனைத்தையும் அரங்கேற்றியது பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற பயங்கரவாத ஆதரவு அமைப்பின் அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த முஸ்லிம் வன்முறையாளர்கள்தான். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவினர் குறித்த ரகசியத் தகவல்களை கேரள காவல்துறையில் ஊடுருவியுள்ள இந்த அமைப்பினர் கசியவிட்டதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது, இந்நிலையில், இச்சம்பவங்கள் தொடர்பாக அக்கட்சியை சேர்ந்தவர்கள் சிலரை பிடித்து விசாரித்தபோது, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க நிர்வாகிகள் குறித்த தகவல்களை சிவில் போலீஸ் அதிகாரி ஆனஸ் என்பவர் தங்களுக்கு வழங்கி வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியை இடைநீக்கம் செய்து இடுக்கி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.